நம்மைச் சுற்றிலும் தென்படுகிற சமூகப் பிரச்சனைகளே கவிதைகளின் கருவாகும். குறிப்பாகச் சொல்லப்போனால் அடைக்கலங்குருவிகள் எனும் சிட்டுக்குருவிகள் அலைபேசிக் கோபுரங்களிலிருந்து வருகிற கதிர்வீச்சினால் அழிந்துபோவதாகப் படித்த செய்தி என் மனதை மிகவும் பாதித்தது. அழிந்துகொண்டிருக்கிற அந்த உயிரினங்களைக் காக்க ஏதேனும் வழி கண்டுபிடிக்கப்பட்டால் அந்தச் செய்தி மிகவும் மகிழ்ச்சிக்குரியதாயிருக்கும். அப்படிப்பட்ட அழிந்துகொண்டிருக்கிற அந்த அடைக்கலங்குருவிகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் சமர்ப்பணம்.
System Details
Requires OverDrive Read (file size: N/A KB) or Adobe Digital Editions (file size: 56 KB) or Kobo app or compatible Kobo device (file size: N/A KB).